உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது கிராமத்தைச் சேர்ந்த நான்கு ஆண்களால் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஹத்ராஸைச் பகுதியை சார்ந்த 20 வயது தலித் பெண் அப்பகுதியில் உள்ள உயர்சாதியை சார்ந்த நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். மேலும், அதன் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், உடல் முழுவதும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. நாக்கும் வெட்டப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் 4 பேர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் 4 பேரையும் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்றச்சாட்டு போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
எவ்வாறாயினும், ஆரம்பத்தில் காவல்துறையினர் தங்களுக்கு உதவவில்லை என்றும், இந்த வழக்கின் எதிர்ப்பை தெரிந்த பிறகுதான் கைது செய்துள்ளதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த விசாரணையில், சிறுமி புல் அறுத்து எடுத்து வரும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக அவரது சகோதரி கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.